Recent Posts
recent

பருவமழையால் வரும் காய்ச்சலை தவிர்க்க செய்ய வேண்டிய விஷயங்கள்..!

மழைக்காலத்தில் சளி, காய்ச்சல், நோய் தொற்றுகள் ஏற்படுவது வழக்கம்தான் என்றாலும், நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம். பருவமழை, குளிர் போன்றவற்றின் காரணமாக வைரஸ் தொற்றுகள், பாக்டீரியா தொற்றுகள், கொசுக்களால் பரவக்கூடிய நோய்கள், பூஞ்சை தொற்றுகள் என பல வகையான பாதிப்புகளை நாம் எதிர்கொள்கிறோம். இந்நிலையில் காய்ச்சலின் போது என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்துகொள்வோம்.

குளிர் காய்ச்சல், Do's and Don'ts for Monsoon Fever, tips to avoid fever and cold,


மழைக்காலங்களில் ஏற்படும் இது போன்ற நோய் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தைகள் இருக்கும் வீட்டில் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். மழைக்காலத்தில் சுற்றுப்புறங்களில் நீர் தேங்காாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் தேங்கும் நீரில் இருந்து தான் கொசுக்கள் உருவாகி, அதன் மூலம் பல நோய்கள் ஏற்படுகின்றன. இங்கு நோய் தொற்றுகள் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் காய்ச்சலின் போது என்ன செய்யகூடாது என்பதை விரிவாக பார்க்கலாம்.

சுகாதாரமான வாழ்க்கை முறை!​

தினசரி இரண்டு முறை குளிப்பது நோய் தொற்றுகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. குழந்தைகள் விளையாடி முடித்தவுடன் கை, கால்களை சுத்தமாக கழுவுதல், பள்ளி சென்று வந்தவுடன் குளித்தல், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் போன்றவை நோய் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க உதவும் சின்ன சின்ன வழிகளாகும். குறிப்பாக சாப்பிடுவதற்கு முன்பு கைகளை சுத்தமாக கழுவி சாப்பிட வேண்டும். நகங்களை சுத்தமாக வைத்திருத்தல் போன்றவை நோய் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்க உதவும்.

நமக்கு நோய் தொற்றுகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஊட்டச்சத்து குறைபாடு. நாம் தினசரி உண்ணும் உணவுகளில் நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறதா? இல்லையா? என்பதை நாம் சரி பார்க்க வேண்டும். தினசரி நான் உண்ணும் உணவில் அதிகளவு காய்கறிகள், பழங்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டினை சரி செய்ய முடியும். இதனால் நமது நோய் எதிர்ப்பாற்றல் மேம்படுவதோடு மட்டுமல்லாமல், நோய் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.

மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் சேகரித்து வைக்கப்படும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. முடிந்த அளவு பிரிட்ஜில் உணவுகளை சேமிக்காமல் இருப்பது ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும். தினசரி தேவைக்கு ஏற்ப சமைத்து சூடாக உணவு உண்பதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். சமைப்பதற்கு முன் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சுத்தமாக கழுவி பயன்படுத்தவும். பழங்களை பூச்சிகள் அண்டாமல் பாதுகாப்பாக வைக்கவும். கொதிக்க வைத்த நீரை அருந்துவது சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

அதிக தண்ணீர் அருந்த வேண்டும்!​


மழைக்காலம் அல்லது குளிர்காலங்களில் நமக்கு அதிகமாக வியர்க்காது, தாகம் எடுக்காது என்பதால் குறைந்த அளவிலான தண்ணீரை நாம் அருந்துகிறோம். பெரியவர்கள் தினசரி குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் முதல் 3 லிட்டர் தண்ணீர் வரை அருந்தலாம். நமது உடலுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காத போது காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இது நமது உடலை வெப்பப்படுத்தி இது போன்ற நோய்களை ஏற்படுத்துகிறது. எனவே தினசரி போதுமான அளவு நீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

​சுகாதாரமற்ற உணவுகள்!​

பணி நிமித்தமாக வெளியூர்களில் வேலை செய்பவர்கள் அல்லது அடிக்கடி ஹோட்டல் உணவை விரும்பி உண்பவர்கள் மழைக்காலங்களில் வெளிப்புற கடைகளில் உட்கொள்வதை தவிர்க்கலாம். சுகாதாரமான இடத்தில் உள்ள உணவுகளை உட்கொள்வது சிறந்தது. மேலும் பதப்படுத்தப்பட்ட அல்லது துரித உணவுகளை தவிர்ப்பது இதுபோன்ற நோய் தொற்றுகள் ஏற்படாமல் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது.

அறிகுறிகளில் கவனம் செலுத்துங்கள்!​

மழைக்காலங்களில் பொதுவாக காய்ச்சல், இருமல், சளி போன்றவை ஏற்படுவது சகஜம் தான் என்றாலும், தொடர்ந்து பல நாட்கள் இது போன்ற அறிகுறிகள் நீடித்தால், உங்களுக்கு மருத்துவ ஆலோசனை தேவை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் நெரிசலான இடங்களில் அதிகமாக செல்வதை தவிர்க்கவும்.

​மருத்துவ ஆலோசனை இன்றி மருந்துகளை உட்கொள்ளுதல்!​


குளிர்காலம் அல்லது மழைக்காலத்தில் காய்ச்சல், சளி என்று வந்துவிட்டால் சில வீட்டு வைத்திய முறைகள் உள்ளன. அவற்றை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால் மருத்துவரின் ஆலோசனை இன்றி அடிக்கடி மாத்திரைகளை உபயோகிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். தொடர்ந்து உங்களுக்கு மூச்சு திணறல், சுவாச பிரச்சனை வறட்டு இருமல் போன்ற பாதிப்புகள் இருந்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

​ஈரமான ஆடைகள் அல்லது காலணிகளை பயன்படுத்துதல்!​

மழைக்காலங்களில் ஈரமான ஆடைகளை மீண்டும் காயாமல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது காய்ச்சல், சளி போன்ற தொற்றுகள் எளிதில் நம்மை தாக்குவதற்கு உதவுகிறது.மேலும் ஈரமான காலணிகளை தொடர்ந்து பயன்படுத்துவதை தவிர்க்கவும். நன்கு உலர்ந்த காலணிகளை பயன்படுத்த வேண்டும். மழைக்காலங்களில் ஷூ போன்ற காலணிகளை தவிர்ப்பது நல்லது.


மழைக்காலத்தில் சளி, காய்ச்சல், நோய் தொற்றுகள் ஏற்படுவது வழக்கம்தான் என்றாலும், நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம். பருவமழை, குளிர் போன்றவற்றின் காரணமாக வைரஸ் தொற்றுகள், பாக்டீரியா தொற்றுகள், கொசுக்களால் பரவக்கூடிய நோய்கள், பூஞ்சை தொற்றுகள் என பல வகையான பாதிப்புகளை நாம் எதிர்கொள்கிறோம். இந்நிலையில் காய்ச்சலின் போது என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்துகொள்வோம்.

குளிர் காய்ச்சல், Do's and Don'ts for Monsoon Fever, tips to avoid fever and cold,


மழைக்காலங்களில் ஏற்படும் இது போன்ற நோய் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தைகள் இருக்கும் வீட்டில் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். மழைக்காலத்தில் சுற்றுப்புறங்களில் நீர் தேங்காாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் தேங்கும் நீரில் இருந்து தான் கொசுக்கள் உருவாகி, அதன் மூலம் பல நோய்கள் ஏற்படுகின்றன. இங்கு நோய் தொற்றுகள் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் காய்ச்சலின் போது என்ன செய்யகூடாது என்பதை விரிவாக பார்க்கலாம்.

சுகாதாரமான வாழ்க்கை முறை!​

தினசரி இரண்டு முறை குளிப்பது நோய் தொற்றுகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. குழந்தைகள் விளையாடி முடித்தவுடன் கை, கால்களை சுத்தமாக கழுவுதல், பள்ளி சென்று வந்தவுடன் குளித்தல், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் போன்றவை நோய் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க உதவும் சின்ன சின்ன வழிகளாகும். குறிப்பாக சாப்பிடுவதற்கு முன்பு கைகளை சுத்தமாக கழுவி சாப்பிட வேண்டும். நகங்களை சுத்தமாக வைத்திருத்தல் போன்றவை நோய் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்க உதவும்.

நமக்கு நோய் தொற்றுகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஊட்டச்சத்து குறைபாடு. நாம் தினசரி உண்ணும் உணவுகளில் நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறதா? இல்லையா? என்பதை நாம் சரி பார்க்க வேண்டும். தினசரி நான் உண்ணும் உணவில் அதிகளவு காய்கறிகள், பழங்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டினை சரி செய்ய முடியும். இதனால் நமது நோய் எதிர்ப்பாற்றல் மேம்படுவதோடு மட்டுமல்லாமல், நோய் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.

மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் சேகரித்து வைக்கப்படும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. முடிந்த அளவு பிரிட்ஜில் உணவுகளை சேமிக்காமல் இருப்பது ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும். தினசரி தேவைக்கு ஏற்ப சமைத்து சூடாக உணவு உண்பதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். சமைப்பதற்கு முன் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சுத்தமாக கழுவி பயன்படுத்தவும். பழங்களை பூச்சிகள் அண்டாமல் பாதுகாப்பாக வைக்கவும். கொதிக்க வைத்த நீரை அருந்துவது சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

அதிக தண்ணீர் அருந்த வேண்டும்!​


மழைக்காலம் அல்லது குளிர்காலங்களில் நமக்கு அதிகமாக வியர்க்காது, தாகம் எடுக்காது என்பதால் குறைந்த அளவிலான தண்ணீரை நாம் அருந்துகிறோம். பெரியவர்கள் தினசரி குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் முதல் 3 லிட்டர் தண்ணீர் வரை அருந்தலாம். நமது உடலுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காத போது காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இது நமது உடலை வெப்பப்படுத்தி இது போன்ற நோய்களை ஏற்படுத்துகிறது. எனவே தினசரி போதுமான அளவு நீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

​சுகாதாரமற்ற உணவுகள்!​

பணி நிமித்தமாக வெளியூர்களில் வேலை செய்பவர்கள் அல்லது அடிக்கடி ஹோட்டல் உணவை விரும்பி உண்பவர்கள் மழைக்காலங்களில் வெளிப்புற கடைகளில் உட்கொள்வதை தவிர்க்கலாம். சுகாதாரமான இடத்தில் உள்ள உணவுகளை உட்கொள்வது சிறந்தது. மேலும் பதப்படுத்தப்பட்ட அல்லது துரித உணவுகளை தவிர்ப்பது இதுபோன்ற நோய் தொற்றுகள் ஏற்படாமல் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது.

அறிகுறிகளில் கவனம் செலுத்துங்கள்!​

மழைக்காலங்களில் பொதுவாக காய்ச்சல், இருமல், சளி போன்றவை ஏற்படுவது சகஜம் தான் என்றாலும், தொடர்ந்து பல நாட்கள் இது போன்ற அறிகுறிகள் நீடித்தால், உங்களுக்கு மருத்துவ ஆலோசனை தேவை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் நெரிசலான இடங்களில் அதிகமாக செல்வதை தவிர்க்கவும்.

​மருத்துவ ஆலோசனை இன்றி மருந்துகளை உட்கொள்ளுதல்!​


குளிர்காலம் அல்லது மழைக்காலத்தில் காய்ச்சல், சளி என்று வந்துவிட்டால் சில வீட்டு வைத்திய முறைகள் உள்ளன. அவற்றை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால் மருத்துவரின் ஆலோசனை இன்றி அடிக்கடி மாத்திரைகளை உபயோகிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். தொடர்ந்து உங்களுக்கு மூச்சு திணறல், சுவாச பிரச்சனை வறட்டு இருமல் போன்ற பாதிப்புகள் இருந்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

​ஈரமான ஆடைகள் அல்லது காலணிகளை பயன்படுத்துதல்!​

மழைக்காலங்களில் ஈரமான ஆடைகளை மீண்டும் காயாமல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது காய்ச்சல், சளி போன்ற தொற்றுகள் எளிதில் நம்மை தாக்குவதற்கு உதவுகிறது.மேலும் ஈரமான காலணிகளை தொடர்ந்து பயன்படுத்துவதை தவிர்க்கவும். நன்கு உலர்ந்த காலணிகளை பயன்படுத்த வேண்டும். மழைக்காலங்களில் ஷூ போன்ற காலணிகளை தவிர்ப்பது நல்லது.


கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.